பிரதமர் அலுவலகம்

ஜம்மு-காஷ்மீரின் தோடாவில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 15 NOV 2023 2:56PM by PIB Chennai

ஜம்மு-காஷ்மீரின் தோடாவில் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக  எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“ஜம்மு-காஷ்மீரின் தோடாவில் நடந்த பேருந்து விபத்து வருத்தமளிக்கிறது. உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்.”

***

ANU/PKV/PLM/RS/KPG



(Release ID: 1977078) Visitor Counter : 90