ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய ரயில்வே 3.0 சிறப்பு இயக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது

Posted On: 09 NOV 2023 12:36PM by PIB Chennai

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்ட மத்திய அரசு, சுற்றுப்புறங்களில் தூய்மை, நிலுவையில் உள்ள பொது விவகாரங்களைக் குறைத்தல் மற்றும் பணியிடங்களில் பணிக் கலாச்சாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு சிறப்பு இயக்கம் 3.0- தொடங்கியது.

மேற்கூறிய முயற்சியின் ஒரு பகுதியாக, தூய்மை மற்றும் சிறந்த நிர்வாகத்தை மேலும் மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வேயில் 02.10.2023 முதல் 31.10.2023 வரை சிறப்பு இயக்கம் 3.0 மேற்கொள்ளப்பட்டது.

மண்டல அலுவலகங்கள், கோட்ட அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள், ரயில்வே பணிமனைகள் மற்றும் நிலையங்கள் உட்பட முழு இந்திய ரயில்வேயிலும் 23,672 தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன. அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களில் கழிவுகளை அகற்றுவதில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது. இதன் விளைவாக 11.80 லட்சம் சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டு சுமார் ரூ.224.95 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இது தவிர, 2.8 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 1.70 லட்சத்துக்கும் மேற்பட்ட கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 1.00 லட்சத்துக்கும் மேற்பட்ட கோப்புகள் இறுதியாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1975817

------


(Release ID: 1975817)

ANU/AD/PKV/KPG/KV

 

 


(Release ID: 1975872) Visitor Counter : 134