நித்தி ஆயோக்

நித்தி ஆயோக்கில், 2023 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை தூய்மை இந்தியா சிறப்பு இயக்கத்தின் 3-ம் கட்ட செயல்பாடுகள்

Posted On: 06 NOV 2023 12:36PM by PIB Chennai

தூய்மையை நிறுவனமயமாக்குவதற்கும் நிலுவையில் உள்ள கோப்புகள் மற்றும் குறைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் குறைப்பதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் உத்வேகம் பெற்ற தூய்மை இந்தியா சிறப்பு இயக்கத்தின் 3-ம் கட்டம், 2023 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை நித்தி ஆயோக்கில் நடைபெற்றது.

இந்த விரிவான இயக்கம் இரண்டு வெவ்வேறு கட்டங்களை உள்ளடக்கியதாக அமைந்தது.

1. ஆயத்த கட்டம் (2023 செப்டம்பர் 15 முதல் 30 வரை): இந்த ஆயத்த கட்டத்தில், நித்தி ஆயோக் 10103 கோப்புகள், நிலுவையில் உள்ள 15 பொதுமக்கள் குறை தீர்க்கும் மனுக்கள், 9 நாடாளுமன்ற உத்தரவாதங்கள் மற்றும் அலுவலக இடங்கள் தொடர்பான நடவடிக்கைகளை அடையாளம் கண்டது.

2. செயலாக்க கட்டம் (2023 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை): அடுத்த கட்டமாக, நிலுவையில் உள்ள 15 மக்கள் குறை தீர்க்கும் மனுக்கள் மற்றும் 2 நாடாளுமன்ற உத்தரவாதங்களில் 100 சதவீத அளவுக்கு நித்தி ஆயோக் வெற்றிகரமாக தீர்வு கண்டது. மொத்தம் 5075 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டதில், 3617 கோப்புகள் மீது பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடித்து வைக்கப்பட்டன. மேலும், அலுவலக இடங்கள், வெளிப்புற வளாகங்கள், பதிவு அறை மற்றும் துறை ரீதியான உணவகம் ஆகியவற்றில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

***

(Release ID: 1974982)

ANU/PKV/PLM/KV



(Release ID: 1974991) Visitor Counter : 90