சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

சேது பந்தன் திட்டத்தின் கீழ், அருணாச்சலப் பிரதேசத்தில் ரூ.118.50 கோடி மதிப்பிலான 7 பாலங்கள் திட்டங்களுக்குத் திரு நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்

Posted On: 12 OCT 2023 3:42PM by PIB Chennai

 மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி  வெளியிட்டுள்ள ஒரு பதிவில், அருணாச்சலப் பிரதேசத்தில் சேது பந்தன் திட்டத்தின் கீழ், 2023-24-ம்  நிதியாண்டில் ரூ.118.50 கோடி செலவில் 7 பாலங்கள் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

 

ஒப்புதல் வழங்கப்பட்ட பாலங்கள் பின்வருமாறு:

 

கிழக்கு காமெங் மாவட்டத்தில் உள்ள லைமோயா, நெரேவாவையும் சோகா கிராமங்களையும் இணைக்கும் லாச்சாங்கில் உள்ள பச்சா ஆற்றின் மீது ஆர்.சி.சி பாலம்.

 

கிழக்கு காமெங் மாவட்டத்தில் உள்ள டோனிகான் செல்லும் வழியில், கோங்கில் உள்ள பச்சா ஆற்றின் மீது கோவாங்கிலிருந்து டோனிகான் கிராமத்திற்கு ஆர்.சி.சி பாலம்.

 

ரோயிங்-அனினி சாலையில் இருந்து லோயர் திபாங் மாவட்டத்தில் உள்ள என்.எச்.பி.சி காலனி வழியாக நியூ சிட்டு கிராமம் வரை தேசிய நெடுஞ்சாலை -313 -ல் 3 பாலங்கள்.

 

- மேற்கு காமெங் மாவட்டத்தின் திராங், கர்சாவில் ஆர்.சி.சி டெக்கிங் கொண்ட இரட்டை வழி எஃகு கலப்பு பாலம்.

லோயர் சியாங் மாவட்டத்தில் உள்ள கோயு-கோய் சாலையில் உள்ள தபிரிபோ சாகு கிராமத்தை இணைக்கும் வகையில் சிஜென் ஆற்றின் குறுக்கே பிக்டே பாயிண்டில் ஆர்.சி.சி பாலம்.

 

கிழக்கு சியாங் மாவட்டத்தில் மெபோ-டோலா சாலையில் என்கோபோக் ஆற்றின் மீது ஆர்.சி.சி பாலம்.

 

- கீழ் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள யாசாலி வேளாண்-பண்ணைக்கு அருகிலுள்ள சுல்யு மற்றும் கெபி கிராமங்களை இணைக்கும் வகையில் பன்யோர் ஆற்றின் மீது ஸ்டீல் காம்போசைட் பாலம்.

 

இந்தத் திட்டங்கள் அருணாச்சல பிரதேசத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், பிராந்தியங்களில் இணைப்பை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் எங்களது உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகின்றன என்று திரு கட்கரி கூறியுள்ளார்.

 

***

(Release ID: 1967034)

ANU/SMB/PKV/AG/KRS



(Release ID: 1967160) Visitor Counter : 95