பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 OCT 2023 9:38AM by PIB Chennai

பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். நானாஜி தேஷ்முக் நாட்டின் கிராமங்கள் மற்றும் பழங்குடி பகுதிகளின் வளர்ச்சிக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்று திரு மோடி கூறியுள்ளார். அவரது தியாகம் மற்றும் சேவை மனப்பான்மை ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகமாக இருக்கும் என்று திரு. மோடி மேலும் கூறியுள்ளார்.

 சமூக ஊடக எக்ஸ் பதிவில்  பிரதமர் கூறியிருப்பதாவது;

"பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் பிறந்த நாளில் அவருக்கு எனது தாழ்மையான மரியாதை. நாட்டின் கிராமங்கள் மற்றும் பழங்குடி பகுதிகளின் வளர்ச்சிக்காக அவர்து வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது தியாகமும், சேவை மனப்பான்மையும் ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகமாக இருக்கும்."

***

ANU/SMB/PKV/AG


(வெளியீட்டு அடையாள எண்: 1966533) வருகையாளர் எண்ணிக்கை : 200