மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா மீன்வளத் துறையின் ஆண்டு திறன் மேம்பாட்டுத் திட்டத்தை புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்.

प्रविष्टि तिथि: 20 SEP 2023 4:44PM by PIB Chennai

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா, மீன்வளத் துறையின் ஆண்டு திறன் மேம்பாட்டுத் திட்டத்தை புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், உயிரி பன்முகத்தன்மை பாதுகாப்பு மைய உறுப்பினர் செயலாளர் பிரவீன் பர்தேஷி, இணைச் செயலாளர் டாக்டர் அபிலாக்ஸ் லிகி, இணைச் செயலாளர் சாகர் மெஹ்ரா மற்றும் மீன்வளத் துறை, உயிரி பன்முகத்தன்மை மையம் மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு பர்ஷோத்தம் ரூபாலா, நமது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் திறன் மேம்பாட்டுத் தேவைகளை அடையாளம் காண்பதும், துறையின் முன்னுரிமைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவர்களின் திறனை வளர்ப்பதற்கான செயல் திட்டத்தை உருவாக்குவதும் காலத்தின் தேவை என்று வலியுறுத்தினார். திறன் மேம்பாட்டிற்கான ஆண்டு செயல்திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர், மீன்வளத் துறையின் ஆண்டு திறன் மேம்பாட்டுத் திட்டம் சேவை வழங்கல், திட்ட செயலாக்கம் மற்றும் முக்கிய அரசு பணிகளைச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், தொடர்புடைய திறன்களைப் பெறுவதற்கும் அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கும் அடிப்படை பயிற்சியில் கலந்துகொள்வதன் மூலம் அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்தும் என்றும் எடுத்துரைத்தார்.

பின்னர் பேசிய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், நாட்டில் பல மீன்வள நிறுவனங்கள் உள்ளன, அங்கு மீன்வளத் துறையில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் காலத்தின் தேவை என்றும், இந்தியாவில் மீன்வளத் துறையின் வளர்ச்சிக்கு ஆண்டு திறன் மேம்பாட்டுத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் டாக்டர் எல்.முருகன் குறிப்பிட்டார்.

****


(Release ID:1959063)

ANU/AD/IR/KPG/KRS


(रिलीज़ आईडी: 1959158) आगंतुक पटल : 190
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Gujarati