குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2023 5:31PM by PIB Chennai

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

விநாயகர் சதுர்த்தி நன்னாளில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அறிவு, ஞானம் மற்றும் செழிப்பின் சின்னமான ஸ்ரீ விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படும் இந்த விநாயகர் சதுர்த்தி விழா மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் திருவிழாவாகும். இந்த பண்டிகை ஒன்றிணைந்து செயல்படுவதற்கான செய்தியை வழங்குவதோடு, வாழ்க்கையில் தாழ்மையுடன் இருக்கவும், சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கவும் ஊக்குவிக்கிறது.

தடைகளைக் கடக்க ஸ்ரீ விநாயகர் நமக்கு உதவட்டும், இதனால் வளர்ந்த தேசத்தை உருவாக்குவதில் நாம் மகத்தான பங்களிப்பை வழங்க முடியும்.

***

SM/ANU/IR/RS/KPG
 


(வெளியீட்டு அடையாள எண்: 1958586) வருகையாளர் எண்ணிக்கை : 201
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi