பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மொரீஷியஸ் பிரதமர், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, அமெரிக்க அதிபர் ஆகியோருடன் புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் பிரதமர் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார்

Posted On: 08 SEP 2023 1:40PM by PIB Chennai

மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் குமார் ஜுக்நாத், பங்களாதேஷ் பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா, அமெரிக்க அதிபர் திரு ஜோ பைடன் ஆகியோருடன் புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் இன்று மாலை இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது சமூக ஊடக எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்வதற்கும், வளர்ச்சி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்த சந்திப்புகள் வாய்ப்பளிக்கும் என்றும் திரு மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர்  கூறியிருப்பதாவது;

"இன்று மாலை, எனது இல்லத்தில் மூன்று இருதரப்பு சந்திப்புகளை நான் நடத்தவிருக்கிறேன். மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் @KumarJugnauth, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் @POTUS @JoeBiden, ஆகியோரை சந்திக்க உள்ளேன். இந்த நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்வதற்கும், வளர்ச்சி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்த சந்திப்புகள் ஒரு வாய்ப்பை வழங்கும்.” 

***

ANU/AD/SMB/AG/KPG

 



(Release ID: 1955567) Visitor Counter : 192