ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, உரங்களின் கையிருப்புக் குறித்து மாநில வேளாண் அமைச்சர்களுடன் ஆலோசித்து ஆய்வு மேற்கொண்டார்

Posted On: 22 AUG 2023 3:37PM by PIB Chennai

நாட்டில் உரங்களின் இருப்பு மற்றும் பயன்பாடு குறித்து மாநில வேளாண் அமைச்சர்களுடன் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று (22.08.2023) கலந்துரையாடினார். கூட்டத்தில், நானோ யூரியா, நானோ டிஏபி போன்ற உரங்கள் பயன்பாட்டின் முன்னேற்றம் மற்றும் மாற்று உரங்களை ஊக்குவித்தல் போன்றவை குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் பேசிய டாக்டர் மாண்டவியா, நாட்டில் போதுமான அளவு உரங்கள் கையிருப்பில் இருப்பதாகவும், தற்போது 150 லட்சம் மெட்ரிக் டன் உரங்கள் கையிருப்பில் உள்ளதாகவும்  தெரிவித்தார். இது நடப்பு காரீப் பருவத்துக்கு  போதுமானதாக இருக்கும் என்பதுடன், வரவிருக்கும் ராபி பருவத்திற்கும் பயன்படும் என்று கூறினார்.

மண்ணைப் பாதுகாக்க ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டியதன் அவசியத்தை டாக்டர் மாண்டவியா எடுத்துரைத்தார். ‘பிரதமர்-பிரணாம்’  திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஏற்கனவே இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது என்று அவர் கூறினார். பூமித் தாயைக் காப்பாற்ற மாற்று உரங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக யூரியா கோல்ட், நானோ யூரியா, நானோ டிஏபி போன்றவற்றை அறிமுகப்படுத்துவதும் இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என அவர் தெரிவித்தார்.

விவசாயிகளின் அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில் நாடு முழுவதும் பிரதமரின் வேளாண் வள மைங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அனைத்து மாநில வேளாண் அமைச்சர்களும், மாநில அரசு அதிகாரிகளும் இந்த இந்த வேளாண் வள மையங்கள் தொடர்பாக விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் அமைச்சர்கள், உரத் துறை மற்றும் வேளாண்மைத்துறையின் மூத்த அதிகாரிகள், மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

----------

AP/ANU/PLM/RS/KPG

 


(Release ID: 1951084) Visitor Counter : 190