ஆயுஷ்

உலக சுகாதார அமைப்பு மற்றும் ஆயுஷ் அமைச்சகம் பாரம்பரிய மருத்துவம் குறித்த முதல் உலகளாவிய உச்சிமாநாட்டை நடத்தவுள்ளன

Posted On: 14 AUG 2023 2:47PM by PIB Chennai

உலக சுகாதார நிறுவனம் ஏற்பாடு செய்து, ஆயுஷ் அமைச்சகம் இணைந்து நடத்தும் பாரம்பரிய மருத்துவம் குறித்த முதல் உலகளாவிய உச்சி மாநாடு 2023 ஆகஸ்ட் 17-18 தேதிகளில் குஜராத்தின் காந்திநகரில் நடைபெற உள்ளது. அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான குறிக்கோளுடன், இந்த துறையில் சமீபத்திய அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் சான்று அடிப்படையிலான அறிவை ஆராய்வதற்கான வல்லுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இந்த மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வு ஒரு தளமாக செயல்படும்.

சுகாதார அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா மற்றும் ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் ஆகியோர் முன்னிலையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயசஸ் இந்த நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார். ஜி 20 சுகாதார அமைச்சர்கள், உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குநர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் ஆறு பிராந்தியங்களில் உள்ள நாடுகளைச் சேர்ந்த முக்கிய அழைப்பாளர்கள் விஞ்ஞானிகள், பாரம்பரிய மருத்துவ பயிற்சியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்களுடன் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் டாக்டர் முஞ்ச்பாரா மகேந்திரபாய் கலுபாய் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய டாக்டர் முஞ்ச்பாரா, உச்சிமாநாட்டின் முடிவு ஒரு அறிவிப்பாக இருக்கும் என்றும், இந்த பிரகடனம் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க உலக சுகாதார அமைப்புக்கு உதவும் என்றும் கூறினார். "கடந்த ஆண்டு ஜாம்நகரில் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்குப் பிறகு, இந்த முதல் உலகளாவிய நிகழ்வை இந்தியாவில் காணப் போகிறோம் என்பது மிகவும் இயற்கையானது. அண்மைக் காலத்தில் நம் நாட்டின் பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறைகள் எடுத்துள்ள பன்முக முன்னேற்றங்களுக்கு இது சான்றாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

***

AP/ANU/IR/RS/GK



(Release ID: 1948561) Visitor Counter : 123