விண்வெளித்துறை

தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் ஒரு புதிய விண்வெளித் தளத்தை அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இஸ்ரோ உருவாக்கிய சிறிய செயற்கைக்கோள் செலுத்து வாகனங்களை (எஸ்.எஸ்.எல்.வி) செலுத்துவதாக இது இருக்கும் என்றும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்

Posted On: 10 AUG 2023 3:52PM by PIB Chennai

தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் ஒரு புதிய விண்வெளித்  தளத்தை அமைக்க அரசு  ஒப்புதல் அளித்துள்ளதாகவும்  இஸ்ரோ உருவாக்கிய சிறிய செயற்கைக்கோள் செலுத்து வாகனங்களை  (எஸ்.எஸ்.எல்.வி) செலுத்துவதாக இது இருக்கும் என்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர்நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  தெரிவித்துள்ளார்.

விண்வெளிப்  பொருளாதாரத்தின் முழு மதிப்புத் தொடரிலும்  அரசு சாரா நிறுவனங்களின் (என்.ஜி.இ) மேம்பட்ட பங்கேற்பிற்காக இந்திய விண்வெளிக் கொள்கை - 2023 இந்தத் துறையைத் திறக்கிறது என்றும் அவர் கூறினார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், "விண்வெளி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் அங்கீகாரம் அளிப்பதற்கும் ஒற்றைச் சாளர நிறுவனமாக இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தை (ஐ.என்-எஸ்.பி.ஏ.சி) மத்திய அரசு அமைத்துள்ளது. இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள்:

2021-22 ரூ.10 கோடி

2022-23 ரூ. 33 கோடி

2023-24 ரூ.95 கோடி

லிகோ-இந்தியா திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.2600 கோடி ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இது அணுசக்தித் துறையை  முகமையாகக் கொண்டுள்ளதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இந்தத் திட்டம் முடிந்ததும், ஈர்ப்பு அலைகளைக் கண்டறிவதற்கும் வானியல் தொடர்பான துறைகளில் ஆராய்ச்சி செய்வதற்கும் லிகோ-இந்தியா ஒரு தேசிய வசதியாக இயக்கப்படும் என்று அவர் கூறினார்.

சந்திரயான் -3  விண்கலம் 14 ஜூலை 2023 அன்று சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 14:35 மணிக்கு எல்.வி.எம் -3 மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது பற்றியும் அதன் தற்போதைய நிலை பற்றியும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

***

 



(Release ID: 1947592) Visitor Counter : 156