சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சுகாதாரம், குடும்ப நலன், இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் திரு பகவந்த் குபா முன்னிலையில் இந்திய மருத்து தொழில்நுட்ப கண்காட்சி 2023 நிகழ்ச்சியில் உரையாற்றினார்

प्रविष्टि तिथि: 10 AUG 2023 2:36PM by PIB Chennai

மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களின் உலகளாவிய மையமாக இந்தியா மாறும் என்றும் சந்தை மதிப்பு 2050-ம் ஆண்டுக்குள் 50 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலன், இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகரில் ஆகஸ்ட் 17 முதல் 19 வரை நடைபெற உள்ள இந்தியாவின் முதல் மருத்துவ தொழில்நுட்ப கண்காட்சியான 'இந்தியா மெட்டெக் எக்ஸ்போ 2023' அறிமுக நிகழ்ச்சியில் உரையாற்றினார். மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் திரு பகவந்த் குபாவும் கலந்து கொண்டார்.

நாட்டின் எழுச்சிப் பெற்று வரும் துறைகளில் ஒன்றாக மருத்துவ உபகரணங்கள் துறை கருதப்படுகிறது. மேலும் பிரதமர் தலைமையிலான மத்திய அரசு இந்தியாவை மருத்துவ உபகரணங்களின் உற்பத்தி மையமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக டாக்டர் மாண்டவியா கூறினார். 1.5 சதவீத சந்தை மதிப்பிலிருந்து, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் சந்தை மதிப்பை 10 முதல் 12 சதவீதமாக உயர்த்துவோம் என் நம்பிக்கை உள்ளதாக அவர்  குறிப்பிட்டார்.. சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய மருத்துவ உபகரணங்கள் கொள்கை 2023-ஐ திறம்பட செயல்படுத்துவதன் மூலம், மருத்துவ சாதனங்கள் துறையின் வளர்ச்சியை தற்போதைய 11 பில்லியன் டாலரிலிருந்து 2030 க்குள் 50 பில்லியன் டாலராக உயர்த்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.

 

மத்திய அமைச்சர் கூறுகையில், "முன்னதாக, மருந்துகள், மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையின் பல்வேறு பிரிவுகளை நாங்கள் பார்த்தோம். மோடி அரசாங்கத்தின் கீழ், 2047 க்குள் நாட்டின் சுகாதார கட்டமைப்பை மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் சுகாதாரத்திற்கான ஒரு முழுமையான அணுகுமுறையை இந்தியா எடுத்து வருகிறது" என்று கூறினார். "பி.எல்.ஐ திட்டம் போன்ற அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பல புதிய முன்முயற்சிகள் 43 முக்கியமான ஏபிஐக்களை நாட்டிற்குள் உற்பத்தி செய்ய வழிவகுத்தன, அவை முன்னர் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இந்தத் துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வதற்காக நாட்டில் மொத்த மருந்து பூங்காக்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பூங்காக்களை அரசாங்கம் உருவாக்கி வருகிறது.

வரவிருக்கும் மெட்டெக் எக்ஸ்போ 2023 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகள், மருந்துகள், உபகரணங்கள் மற்றும் வசதிகளில் இந்தியாவின் கண்டுபிடிப்புகள் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்தும் என்று டாக்டர் மாண்டவியா கூறினார். இந்த நிகழ்வு இந்தியாவில் மருத்துவ சாதனங்களின் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதோடு, இந்திய மெட்டெக் துறைக்கு ஒரு பிராண்ட் அடையாளத்தை உருவாக்கும் என்று அவர் எடுத்துரைத்தார்.

மாண்புமிகு பிரதமர் தலைமையிலான அரசாங்கம் சுகாதாரத் துறையில் நாட்டை தற்சார்பாக மாற்ற உறுதிபூண்டுள்ளது என்று திரு பகவந்த் குபா கூறினார். தொழில்துறையினர், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கண்காட்சியை பார்வையிட்டு இப்பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்களை பார்வையிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மருந்துத் துறையின் செயலாளர் திருமதி எஸ்.அபர்ணா பேசுகையில், "மருத்துவ உபகரணங்கள் துறை இன்று வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார். மருத்துவ உபகரணங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான தொழில்துறைக்கு உத்வேகம் அளிக்க அரசால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட 37 தனித்துவமான தயாரிப்புகள் தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.

****

 

ANU/AD/IR/KPG


(रिलीज़ आईडी: 1947517) आगंतुक पटल : 166
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Telugu