நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கவும், அத்தியாவசியமற்ற இறக்குமதியை குறைக்கவும் நடவடிக்கைகள்
Posted On:
09 AUG 2023 2:13PM by PIB Chennai
நாட்டின் நிலக்கரித் தேவையில் பெரும் பகுதி உள்நாட்டு உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதிலும், அவசியமற்ற நிலக்கரி இறக்குமதியை தவிர்ப்பதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. 2022-23 ஆம் ஆண்டில், நிலக்கரி உற்பத்தி அதற்கு முந்தைய ஆண்டை விட சுமார் 14.77% அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில், ஜூலை, 2023 வரை, உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 9.2 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு 2023-24 ஆம் ஆண்டில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி ஒரு பில்லியன் டன்னுக்கும் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2019-20 ஆம் ஆண்டில் 569.5 மில்லியன் டன் (மெட்ரிக் டன்) ஆக இருந்த உள்நாட்டு நிலக்கரியின் வரவு 2022-23 ஆம் ஆண்டில் 731.7 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2023 வரை, மின்சாரத் துறையின் நிலக்கரி இறக்குமதி கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 16.36 மெட்ரிக் டன்னிலிருந்து 14.21 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது. அனல் மின் நிலையத்தில் 2023 ஆகஸ்ட் 5ம் தேதி நிலவரப்படி 32.09 மெட்ரிக் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. இது சுமார் 16 நாட்களுக்கு போதுமானது.
இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
****
AD/ANU/IR/RS/KPG
(Release ID: 1947100)