நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2023 ஜூன் வரை நிலக்கரி உற்பத்தி 8.51% அதிகரிப்பு

Posted On: 07 AUG 2023 3:50PM by PIB Chennai

நிலக்கரி சுரங்கங்களை மூடுவதால் நிலக்கரி நிறுவனங்களின் (இந்திய நிலக்கரி நிறுவனம் / சிங்கரேனி நிலக்கரி நிறுவனம்) சேவைகளில் இருந்து எந்தவொரு தொழிலாளியும் பணிநீக்கம் செய்யப்படுவதில்லை. போதுமான பயிற்சியை வழங்குவதன் மூலம், தொழிலாளர்கள் திறம்பட பயன்படுத்துவதற்காக வேறு அலகுகள்/ நிறுவனங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்/ மாற்றப்படுகிறார்கள்.

நாட்டின் பெரும்பாலான நிலக்கரித் தேவை உள்நாட்டு உற்பத்தி / விநியோகம் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதிலும், நாட்டில் அத்தியாவசியமற்ற நிலக்கரி இறக்குமதியை தவிர்ப்பதிலும் அரசு கவனம் செலுத்துகிறது. 2022-23 ஆம் ஆண்டில், நிலக்கரி உற்பத்தி முந்தைய ஆண்டை விட 14.77% அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில், ஜூன், 2023 வரை, உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 8.51 சதவீதம் அதிகரித்துள்ளது. நிலக்கரி உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்ய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பின்வருமாறு:

  1. நிலக்கரி சுரங்கங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்த நிலக்கரி அமைச்சகத்தின் வழக்கமான ஆய்வுகள்.
  2. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2021 இயற்றுதல், சுரங்க உரிமையாளர்கள் (அணுக் கனிமங்கள் தவிர) தங்கள் வருடாந்திர கனிம உற்பத்தியில் (நிலக்கரி உட்பட) 50% வரை சுரங்கத்துடன் இணைக்கப்பட்ட இறுதி பயன்பாட்டு ஆலையின் தேவையை பூர்த்தி செய்த பின்னர் வெளிச் சந்தையில் விற்பனை செய்ய ஏதுவாகும்.
  3. நிலக்கரி சுரங்கங்களின் செயல்பாட்டை விரைவுபடுத்த நிலக்கரித் துறைக்கான ஒற்றைச் சாளர அனுமதிக்கான இணையதளம்.
  4. நிலக்கரிச் சுரங்கங்களை விரைவாகச் செயல்படுத்துவதற்கு பல்வேறு ஒப்புதல்கள்/ அனுமதிகளைப் பெறுவதற்காக நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டாளர்களைக் கையிலெடுப்பதற்கான திட்டக் கண்காணிப்பு அலகு.

இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

 

***

(Release ID: 1946387)

ANU/AP/IR/RR/KPG


(Release ID: 1946501) Visitor Counter : 162