பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மகளிர் மேம்பாடு குறித்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் அமைச்சர்கள் மாநாடு பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளைக் கொண்டாடியது
Posted On:
07 AUG 2023 1:43PM by PIB Chennai
மகளிருக்கு அதிகாரமளித்தல் குறித்த ஜி 20 அமைச்சர்கள் மாநாடு 2023 ஆகஸ்ட் 2 முதல் 4 வரை குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்றது. இதில் ஜி 20 மற்றும் விருந்தினர் நாடுகளைச் சேர்ந்த மகளிர் மற்றும் பாலின சமத்துவ அமைச்சர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். பெண்கள் செழிக்கும்போது, உலகம் செழிக்கும். அவர்களின் பொருளாதார அதிகாரமளித்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, கல்விக்கான அவர்களின் அணுகல் உலகளாவிய முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது, அவர்களின் தலைமைத்துவம் உள்ளடக்கத்தை ஊக்குவிக்கிறது, மேலும் அவர்களின் குரல்கள் நேர்மறையான மாற்றத்தை ஊக்குவிக்கின்றன என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
இந்தியாவின் ஜி 20 தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா; மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி; இந்தோனேசியாவின் மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சர் திருமதி ஐ குஸ்தி அயு பின்டாங் தர்மவதி; பிரேசில் கூட்டாட்சிக் குடியரசின் மகளிர் நல துணை அமைச்சர் திருமதி மரியா ஹெலனா குவாரெஸி; மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திரு. இந்தேவர் பாண்டே ஆகியோரும் பேசினர்.
இதைத் தொடர்ந்து ஜி 20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளால் நாட்டு அறிக்கைகள் மற்றும் அமைச்சு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இந்த மாநாட்டின் போது, ஸ்டெம் உள்ளிட்ட கல்வி, டிஜிட்டல் திறன், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் பெண்கள், அடித்தள நிலையில் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான கூட்டாண்மை, கலாச்சாரம், பெண்கள் தொழில் முயற்சி போன்ற தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் டாக்டர் முஞ்பாரா மகேந்திரபாயின் உரை, பிரேசிலுக்கு மாநாட்டுக்கோல் ஒப்படைத்தல், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானியின் நிறைவுரை ஆகியவற்றுடன் அமைச்சர்கள் மாநாடு நிறைவடைந்தது. ஜி 20 உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் சார்பில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கு பொறுப்பான ஜி 20 அமைச்சர்களின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில், பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை அடைவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
3,00,000 க்கும் அதிகமானோரின் மக்கள் பங்கேற்பு நிகழ்வுகள் மூலம் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி வெளிப்படுத்தப்பட்டன. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண் சமூகத் தலைவர்கள், கைவினைஞர்கள், சுய உதவிக் குழுக்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றன.
அமைச்சர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற இருதரப்பு கூட்டங்களில், கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 1.4 மில்லியன் அங்கன்வாடி மையங்களில் உள்ள வளரிளம் பெண்கள் உட்பட சுமார் 100 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து சேவைகளை கண்காணிப்பதற்கான ஒரு நிர்வாக கருவியாக உருவாக்கப்பட்டுள்ள தனித்துவமான ஐ.சி.டி தளமான போஷன் டிராக்கருக்கு ஜி 20 நாடுகள் பாராட்டு தெரிவித்தன.
அமைச்சர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்திய தொழில்கள் கூட்டமைப்புடன் (சிஐஐ) இணைந்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியை, மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தொடங்கிவைத்தார். குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். 'India@75: பெண்களின் பங்களிப்பு' என்ற தலைப்பில், கைவினையில் பெண்களை மையப்படுத்தி கண்காட்சி நடைபெற்றது; ஆரோக்கியத்தில் பெண்கள்; வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் பெண்கள்; அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்கள்; ஊட்டச்சத்து மற்றும் உணவில் பெண்கள்; கல்வி மற்றும் திறமையில் பெண்கள்; விளையாட்டில் பெண்கள்; பாதுகாப்பு பணியில் பெண்கள் பற்றியும் காட்சிப்படுத்தப்பட்டன
*****
ANU/AP/SMB/KPG
(Release ID: 1946439)
Visitor Counter : 224