பிரதமர் அலுவலகம்

உத்தரப்பிரதேசத்தின் ஃபத்தேபூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 16 MAY 2023 7:15PM by PIB Chennai

உத்தரப்பிரதேசத்தின் ஃபத்தேபூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு பிரதமர்  திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும்  பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“ஃபத்தேபூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா. 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவியாக வழங்கப்படும்.

******

(Release ID: 1924592)

AP/ES/RS/KRS



(Release ID: 1924620) Visitor Counter : 118