குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

தற்சார்பு இந்தியா மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டை அடைவதற்கான இலக்குத் துறையாக சுகாதாரத்துறை அடையாளம் காணப்பட்டுள்ளதாக திரு. நாராயண் ரானே கூறியுள்ளார்

Posted On: 04 MAY 2023 5:24PM by PIB Chennai

மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.நாராயண் ரானே, 2023 மே 3-ம் தேதியன்று புது தில்லியில் இந்திய சுகாதார உரையாடல் (IHD) தளத்தை தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் உரையாற்றிய திரு.ரானே, “நமது பிரதமர் திரு.நரேந்திர மோடியின் உத்வேகம் மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ் சர்வதேச உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். அனைத்துத் துறைகளிலும் தற்சார்பு நிலையைக் கொண்டு வர வேண்டும். இறக்குமதியைக் குறைப்பதற்கான துறையாக சுகாதாரத்துறை அடையாளம் காணப்பட்டுள்ளது” என்றார்.

​​உலக சுகாதாரத் துறை வல்லுநர்களின் கருத்துப்படி, எதிர்காலத்தில் இந்தியாவின் அதிநவீன தொழில்நுட்பங்கள் சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தப் போகிறது. இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதில், 

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சகத்தின் பங்கு முக்கியமானது என்றும் அவர்கள் கருதினர்.

இந்திய சுகாதார உரையாடல்(IHD) என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய மருத்துவ சங்கத்துடன் (IMA) இணைந்து, இந்திய வர்த்தக சபை முன்னெடுத்துள்ள சர்வதேச முயற்சியாகும். இது எதிர்காலத்தில் சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் அமைப்பாகும்.

இந்திய சேம்பர் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு.நிதின் பங்கோத்ரா கூறுகையில், ஐஹெச்டி ஒரு ஒருங்கிணைந்த தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும்,  மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், சுகாதாரத்துறையில் தற்சார்பை அடைய உதவும் எனவும் தெரிவித்தார். தளம் ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது என்றார்.

                                                                                                                                         ----

AD/CR/KPG



(Release ID: 1922045) Visitor Counter : 128