பாதுகாப்பு அமைச்சகம்

ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பு கூட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய பாதுகாப்பு அமைச்சர், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ், கிர்கிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை

Posted On: 28 APR 2023 4:52PM by PIB Chennai

ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பு கூட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத்சிங், உஸ்பெகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பஹோடிர் குர்பனாவ்,  பெலாரஸ் பாதுகாப்பு அமைச்சர் விக்டர் கெரினின், கிர்கிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பெக்பெலோடோவ் வி. அசன்கலிவிச் ஆகியோருடன் புதுதில்லியில் இன்று (2023 ஏப்ரல் 28) பேச்சுவார்த்தை நடத்தினார்.  இதில் அந்த நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவை பலப்படுத்துவதற்கான வழிகளை அடையாளம் காண்பது குறித்தும், இருதரப்புக்கும் பொதுவான  விவகாரங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இதேபோல் ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து அந்த கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு ஜாங் மிங் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது ஷாங்காய் கூட்டமைப்பின் ஆணையை செயல்படுத்த இந்தியா உறுதிபூண்டு இருப்பதாக திரு ராஜ்நாத்சிங், திரு ஜாங் மிங்கிடம் தெரிவித்தார்.  

***

(Release ID: 1920533)

AD/ES/RJ/KRS



(Release ID: 1920559) Visitor Counter : 129