பிரதமர் அலுவலகம்
உள்நாட்டு எரிவாயு விலை நிர்ணய வழிகாட்டுதல்களை மாற்றியமைக்கும் அமைச்சரவையின் முடிவுக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
07 APR 2023 11:19AM by PIB Chennai
சர்வதேச எரிவாயு விலை உயர்வால் இந்தியாவில் எரிவாயு விலையில் ஏற்படும் மாற்றத்தை குறைத்து நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அமைச்சரவையின் முடிவைப் பிரதமர் பாராட்டியுள்ளார்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரியின் ட்வீட்டைப் பகிர்ந்து அதற்குப் பதிலளித்துள்ள பிரதமர்,
"திருத்தப்பட்ட உள்நாட்டு எரிவாயு விலை நிர்ணயம் தொடர்பான அமைச்சரவை முடிவு நுகர்வோருக்கு பல நன்மைகளைத் தரும். இது துறைக்கு சாதகமான வளர்ச்சியாகும்." என்று கூறியுள்ளார்.
----
VJ/JL/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1914624)
வருகையாளர் எண்ணிக்கை : 181
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam