குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

குறு, சிறு நிறுவனங்களுக்கான புதுப்பிக்கப்பட்ட கடன் உத்தரவாதத் திட்டம் 01.04.2023 முதல் அமலுக்கு வருகிறது

Posted On: 31 MAR 2023 1:58PM by PIB Chennai

சிறு, குறு நிறுவனங்களுக்குப் பிணையில்லாமல்
ரூ 2 லட்சம் கோடி உத்தரவாதப்படுத்திய கடன் கூடுதலாக வழங்கவும், கடனுக்கான வட்டி விகிதத்தை ஒரு சதவீதம் அளவுக்கு குறைக்கவும் ஏதுவாக தொகுநிதியத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடி வழங்கப்பட்ட நிலையில், இந்நிறுவனங்களுக்கான புதுப்பிக்கப்பட்ட கடன் உத்தரவாதத் திட்டம் 01.04.2023 முதல் அமலுக்கு வருவதாக மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் 2023-24-ல் அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பின்வரும் முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதிய அறக்கட்டளையின் தொகுநிதியத்திற்கு 30.03.2023 அன்று ரூ.8,000 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
  • ஒரு கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வருடாந்திர உத்தரவாத கட்டணத்தை 2% என்பதில் இருந்து 0.37% என குறைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை இந்த அறக்கட்டளை நிதியம் வெளியிட்டுள்ளது.  இதனால்  சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் பெறும் செலவு வெகுவாகக் குறையும்.
  • உத்தரவாதத்திற்கான உச்சவரம்பு ரூ.2 கோடியில் இருந்து, ரூ.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2022-23 நிதி ஆண்டு காலத்தில் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான உத்தரவாதங்களுக்கு ஒப்புதல் வழங்கியிருப்பதன் மூலம்  இந்த நிதிய அறக்கட்டளை புதிய சாதனை படைத்துள்ளது.

***

(Release ID: 1912500) 

AD/SMB/AG/KRS



(Release ID: 1912632) Visitor Counter : 219