விவசாயத்துறை அமைச்சகம்

இந்தூரில் ஜி-20 கூட்டத்தின் முதல் நாளில் பிரதிநிதிகள் நகரில் சுற்றுலா மேற்கொண்டனர்

Posted On: 13 FEB 2023 3:05PM by PIB Chennai

இந்தூரில் ஜி-20 விவசாயப் பணிக்குழுக் கூட்டத்தின் முதல் நாளில், பங்கேற்ற உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள்  நகரின் முக்கிய இடங்களை பார்வையிட்டனர்.

ராஜ்வாடா அரண்மனை, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தூரின் சத்ரிகளுக்கு பிரதிநிதிகள் சென்றனர்.

இந்த சுற்றுலா நடைபயணத்தின் போது பிரதிநிதிகள் உள்ளூர் உணவுகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை ரசித்தனர்.

போலியா சர்க்கார் ஸ்மாரக் சத்ரியில் இருந்து தொடங்கிய பாரம்பரிய நடைபயணம் கிருஷ்ணாபுரா சத்ரி வழியாக ராஜ்வாடாவை அடைந்தது.

பின்னர்பிரதிநிதிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.  அவர்களுடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மை அமைச்சக அதிகாரிகள் பிரதிநிதிகளுடன் சென்றனர்.

***

 

PKV/AG/RR



(Release ID: 1898899) Visitor Counter : 138