பிரதமர் அலுவலகம்

பிரதமரின் தேசிய சிறார் விருது (ராஷ்ட்ரீய பால புரஸ்கார்) பெற்றவர்களுடன் நாளை பிரதமர் கலந்துரையாடுகிறார்

Posted On: 23 JAN 2023 2:59PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரதமரின் தேசிய சிறார்  விருதாளர்களுடன்  நாளை  மாலை 4 மணிக்கு தமது இல்லத்தில் கலந்துரையாடுகிறார்.

 புதுமை, சமூக சேவை, கல்வியியல், விளையாட்டு, கலை & கலாச்சாரம் மற்றும் வீரம் ஆகிய ஆறு பிரிவுகளில் சிறப்பான சாதனை படைத்த குழந்தைகளுக்கு மத்திய அரசு பிரதமரின் தேசிய சிறார்  விருதுகளை வழங்கி வருகிறது. விருது பெறும் ஒவ்வொருவருக்கும் பதக்கம், ரூ. 1 லட்சம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இந்த ஆண்டு, நாடு முழுவதிலுமிருந்து 11 குழந்தைகள் பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விருதாளர்களில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 6 சிறுவர்களும் 5 பெண்களும் அடங்குவர்.

***

(Release ID: 1892976)

AP/PKV/AG/KRS



(Release ID: 1893000) Visitor Counter : 221