சுரங்கங்கள் அமைச்சகம்

தொழில்நுட்ப கூட்டு நடவடிக்கைகளுக்காக இந்துஸ்தான் காப்பர் லிமிடெட், ஐஐடி (ஐஎஸ்எம்) தன்பத் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted On: 04 JAN 2023 12:21PM by PIB Chennai

தொழில்நுட்ப கூட்டு நடவடிக்கைகளுக்காக இந்துஸ்தான் காப்பர்  லிமிடெட் (ஹெச்சிஎல்) மற்றும் ஐஐடி (ஐஎஸ்எம்-இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ்) தன்பத் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கொல்கத்தாவில் உள்ள  ஹெச்சிஎல் தலைமை அலுவலகத்தில் கையெழுத்தானது. ஹெச்சிஎல்-ன் தலைமை நிர்வாக இயக்குநர் திரு அருண்குமார் சுக்லா மற்றும் ஐஐடி (ஐஎஸ்எம்), தன்பத் பேராசிரியர் ராஜீவ் சேகர் ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தற்போது கையெழுத்தாகியுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஹெச்சிஎல் நிறுவனத்திற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளை ஐஐடி (ஐஎஸ்எம்) வழங்க வழிவகை செய்யப்படும். மேலும் உலோக உற்பத்தியில் புதிய தொழிலநுட்பங்கள் மூலம் உற்பத்தி அளவை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள் போன்றவைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1888479

***

AP/GS/RJ/KPG



(Release ID: 1888503) Visitor Counter : 140