விவசாயத்துறை அமைச்சகம்

மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தலைமையில் பிம்ஸ்டெக் நாடுகளின் வேளாண்துறை அமைச்சர்கள் பங்கேற்ற 2-வது கூட்டத்தை இந்தியா நடத்தியது

Posted On: 10 NOV 2022 3:00PM by PIB Chennai

மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தலைமையில் பல்வேறு துறைச் சார்ந்த தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பின் வேளாண்துறை அமைச்சர்கள் நிலையிலான இரண்டாவது கூட்டத்தை இந்தியா இன்று நடத்தியது. இக்கூட்டத்தில் பூடான், பங்களாதேஷ், நேபாளம், மியான்மர், இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளின் வேளாண்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்

காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய திரு தோமர், வேளாண்துறை மாற்றத்திற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த விரிவான பிராந்திய செயல் திட்டத்தை ஏற்படுத்த ஒத்துழைக்குமாறு உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டார். சிறுதானிங்களின் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட அவர், இது ஊட்டச்சத்துமிக்கது என்று கூறினார். சிறு தானியங்களை பிரபலப்படுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை எடுத்துக்கூறினார்.  2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிங்கள் ஆண்டாக கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில், அனைவருக்கும் உகந்த வேளாண்முறையை கடைப்பிடித்து, ஆரோக்கியமான உணவை வழங்குமாறு உறுப்பு நாடுகளை அவர் வலியுறுத்தினார். சிறு தானியங்களை ஒரு உணவாக பிரபலப்படுத்தும் இந்தியாவின் முயற்சியில் இணைந்து செயல்படுமாறு அவர் கேட்டுக்கொண்டார். இயற்கை மற்றும் சூழலியல் வேளாண்முறை வேளாண்- உயிரி  பன்முகத்தன்மையை பாதுகாத்து ரசாயன பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று திரு நரேந்திர சிங் தோமர் கூறினார்.

**************

AP/IR/RS/IDS



(Release ID: 1874977) Visitor Counter : 241