பிரதமர் அலுவலகம்

தால் ஏரியில் இந்தியாவின் முதலாவது மிதவை நிதி எழுத்தறிவு முகாமை நடத்திய இந்திய அஞ்சலகக் கட்டண வங்கிக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 05 NOV 2022 11:24AM by PIB Chennai

நிவேஷக் தீதீ முன்முயற்சியின் கீழ் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தால்  ஏரியில் இந்தியாவின் முதலாவது மிதவை நிதி எழுத்தறிவு முகாமை நடத்திய இந்திய அஞ்சலகக்  கட்டண வங்கிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

வங்கியின் ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் அளித்த பதிலில், “பெண்களுக்கு அதிகாரமளித்தலை வலுப்படுத்தும் அற்புதமான முன்முயற்சி”, என்று குறிப்பிட்டார்.

*********



(Release ID: 1873888) Visitor Counter : 133