பிரதமர் அலுவலகம்

மத்திய பிரதேசத்தின் பெட்டூலில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது

Posted On: 04 NOV 2022 10:01AM by PIB Chennai

மத்திய பிரதேசத்தின் பெட்டூலில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகையையும் பிரதமர்  அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

மத்திய பிரதேசத்தின் பெட்டூலில் ஏற்பட்ட விபத்து காரணமான உயிரிழப்புக்கு வருந்தினேன். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகையாக வழங்கப்படும் : பிரதமர்”

**************

(Release ID: 1873606)

SM/SMB/AG/RR



(Release ID: 1873627) Visitor Counter : 121