பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்வதில் இந்தியா போர்க்குணத்தை வெளிப்படுத்தியுள்ளது: பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி
प्रविष्टि तिथि:
11 SEP 2022 2:02PM by PIB Chennai
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்வதில், இந்தியா தனது போர்க்குணத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி கூறினார்.
மத்திய அமைச்சர் செய்தியாளர்களின் சந்திப்பின் போது, எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், சுய-சார்பு நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான சில ஒப்பந்தக்களிலும் கையெழுத்திட்டார். அது குறித்து அவர் பின்னர் பேசும் போது, “உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளின் ஏற்ற இறக்கத்தைக் குறைக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வளர்ந்த நாடுகளில் எரிபொருள் விலை உயர்வு மிக அதிகமாக இருப்பதை ஒப்பிடுகையில் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
மாண்புமிகு பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ், சுய-சார்பு நடவடிக்கைத் தொடர்பான முதலீட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் கூறினார். பெட்ரோலில் எத்தனாலை 10 சதவீதம் கலப்பது, 2ஜி சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசின் உறுதிப்பாட்டின் அடையாளமாகும் என்றார்.
‘இந்தியா எரிசக்தி வாரம் 2023’ என்ற நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பிராந்திய மற்றும் உலக அளவில் உள்ள முக்கியத் தலைவர்கள் ஒன்றிணைந்து எரிசக்தித் துறையில் வளர்ச்சி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவர்” என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். ‘இந்தியா எரிசக்தி வாரம் 2023’ நிகழ்ச்சி தொடர்பாக ஒரு லோகோ வை மத்திய அமைச்சர் வெளியிட்டார்.
-----
(रिलीज़ आईडी: 1858532)
आगंतुक पटल : 286