குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஜன்மாஷ்டமியையொட்டி குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 18 AUG 2022 5:03PM by PIB Chennai

ஜன்மாஷ்டமியையொட்டி குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

குடியரசு துணைத்தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்த மங்களகரமான தருணத்தில் எனது நல்வாழ்த்துக்களை நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

பகவான் கிருஷ்ணரின் பிறப்பைக் குறிக்கும் ஜென்மாஷ்டமி, பக்தர்களுக்கு  ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. அதர்மத்தை அழித்து தர்தமத்தை நிலைநாட்டும் நம்பிக்கையை இது உறுதி செய்கிறது.

கிருஷ்ணர் தெய்வீக அன்பு, உயர்ந்த அழகு மற்றும் நித்திய ஆனந்தம் ஆகியவற்றின் உருவகம். பகவத் கீதையில் அவரது காலத்தால் அழியாத போதனைகள் மனிதகுலத்திற்கு ஒரு சிறந்த உத்வேகத்தை அளித்துள்ளன.

 

இந்த ஜென்மாஷ்டமி நமது வாழ்க்கையில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்

 

***************

(Release ID: 1852893)


(வெளியீட்டு அடையாள எண்: 1852941) வருகையாளர் எண்ணிக்கை : 211
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Malayalam