தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒண்டி வீரன் நினைவு தபால்தலை வெளியிட ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவுக்கு டாக்டர் எல் முருகன் நன்றி

இடுகை இடப்பட்ட நாள்: 16 AUG 2022 4:56PM by PIB Chennai

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு தபால்தலையை வெளியிட ஒப்புதல் அளித்த,  மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவுக்கு மத்திய தகவல் ஒலிப்பரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்  நன்றி தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தமிழகத்தின் திருநெல்வேலியில் ஒண்டி வீரனின் நினைவு தினமான வரும் 20ம் தேதி அவரது நினைவு தபால்தலை வெளியிடப்பட உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1852282

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1852303) வருகையாளர் எண்ணிக்கை : 275
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu