சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

நீதிபதி திரு உதய் உமேஷ் லலித், இந்தியாவின் 49-வது தலைமை நீதிபதியாக நியமனம்

Posted On: 10 AUG 2022 5:33PM by PIB Chennai

     அரசியல் சட்டப்பிரிவு 124(2)-ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, உச்சநீதிமன்ற நீதிபதி திரு உதய் உமேஷ் லலித் (யு யு லலித்), இந்தியாவின் 49-வது தலைமை நீதிபதியாக 27 ஆகஸ்ட் 2022 அன்று குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

     நீதிபதி யு யு லலித், ஆகஸ்ட் 2014-ல், வழக்கறிஞரிலிருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்தியாவின் 13-வது தலைமை நீதிபதியாக 1971-ல் பணியாற்றிய  நீதிபதி எஸ் எம் சிக்ரி-க்கு பிறகு, வழக்கறிஞரிலிருந்து நேரடியாக உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட நீதிபதி இவர் ஆவார்.

     உச்சநீதிமன்ற சட்டப்பணிகள் ஆணையத்தின் உறுப்பினராக இவர் இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.  

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1850553

***************



(Release ID: 1850593) Visitor Counter : 206