பிரதமர் அலுவலகம்

பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜூடோ வீராங்கனை துலிகா மானிற்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 03 AUG 2022 11:55PM by PIB Chennai

புதுதில்லி, ஆகஸ்ட் 03, 2022
பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜூடோ வீராங்கனை துலிகா மானிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“பர்மிங்ஹாம் போட்டிகளில் துலிகா மான் அபாரம்! ஜூடோ விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு நல்வாழ்த்துகள். அவரது தனித்துவம் வாய்ந்த விளையாட்டு பயணத்தில் இந்த பதக்கம் மேலும் ஓர் பெருமை. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.”
****
(Release ID: 1848154)



(Release ID: 1848198) Visitor Counter : 97