பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் விகாஸ் தாக்கூருக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 02 AUG 2022 10:17PM by PIB Chennai

பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் விகாஸ் தாக்கூருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“காமன்வெல்த் போட்டிகளில் மற்றொரு வெற்றி. இந்த முறை பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார், விகாஸ் தாக்கூர். அவரது வெற்றியால் மகிழ்ச்சி அடைகிறேன். விளையாட்டில் அவரது அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. அவரது வருங்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.”

 

***

(Release ID: 1847625)


(रिलीज़ आईडी: 1847749) आगंतुक पटल : 160
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam