பிரதமர் அலுவலகம்
பாரபங்கியில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் நேரிட்ட விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார்
Posted On:
25 JUL 2022 1:38PM by PIB Chennai
பாரபங்கியிலுள்ள பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ள அவர், உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்று கூறினார்.
பிரதமர் அலுவலக ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,
பாரபங்கியில் பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் நடந்த சாலை விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இதில், தங்களின் அன்புக்கு உரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். மாநில அரசின் மேற்பார்வையில் உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. பிரதமர்
***************
Release ID: 1844569
(Release ID: 1844586)
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam