தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பத்திரிகையாளர்கள் நல நிதியிலிருந்து 7 பத்திரிகையாளர்கள் மற்றும் 35 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க அரசு ஒப்புதல்


கொவிட்-19 பாதிப்பு காரணமாக உயிரிழந்த 16 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கும் அரசு நிதியுதவி

Posted On: 01 JUL 2022 6:24PM by PIB Chennai

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர் திரு அபூர்வ சந்திரா தலைமையிலான பத்திரிகையாளர் நலத்திட்டக்குழு, காலஞ்சென்ற பத்திரிகையாளர் 35 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குமாறு அளித்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதில் கொவிட்-19 தொற்று பாதிப்பால் உயிரிழந்த 16 பத்திரிகையாளர் குடும்பங்களும் அடங்குவர். இவர்களுக்கு பத்திரிகையாளர் நலத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம்  வரை நிதியுதவி வழங்கப்படும்.

இதுதவிர, நிரந்தர உடல் திறன் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட 2 பத்திரிகையாளர்கள் மற்றும்  பெரிய நோய்களுக்கு சிகிச்சை பெறும் 5 பத்திரிகையாளர் குடும்பங்களுக்கும் நிதியுதவி அளிக்க இக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.  மொத்தம் ரூ.1.81 கோடி நிதியுதவி வழங்க இக்குழுவின் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுவரை கொவிட்-19- பாதிப்பால் உயிரிழந்த 123 பத்திரிகை யாளர்களின் குடும்பங்களுக்கு  நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளவர்களையும்  சேர்த்து 139 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.  

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1838651

***************


(Release ID: 1838677) Visitor Counter : 182