தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

அஞ்சல்துறையில் பல்வேறு பதவிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் ஆவணம் சரிபார்ப்புக்கான கடைசி தேதியை ஜூலை 15 2022 வரை நீட்டித்துள்ளது

Posted On: 01 JUL 2022 2:19PM by PIB Chennai

அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக, பல்வேறு பதவிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் ஆவணங்கள் சரி பார்ப்புக்கான கடைசி தேதியை ஜூலை 15 2022 வரை நீட்டிக்க அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளச்சூழலை கருத்தில் கொண்டு, பல்வேறு பதவிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் ஆவணங்கள் சரி பார்ப்புக்கான கடைசி தேதி ஜூலை 30-லிருந்து ஜூலை 15 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது”.

                                                                 ***************



(Release ID: 1838577) Visitor Counter : 197