பிரதமர் அலுவலகம்

ராஜஸ்தானின் ஜலோர் சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 28 JUN 2022 11:10AM by PIB Chennai

ராஜஸ்தானின் ஜலோர் சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சோகமான இழப்பை தாங்கிக் கொள்ள அவர்களின் குடும்பத்திற்கு மனோபலம் கிடைக்க அவர் பிரார்த்தனை செய்துள்ளார்.

பிரதமர் அலுவலக ட்விட்டரில்  கூறியிருப்பதாவது:

“ராஜஸ்தானின் ஜலோர் சாலை விபத்து மிகவும் சோகமானது.  இதில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை நான் தெரிவித்துகொள்கிறேன். இந்த சோகமான தருணத்தில் இறைவன் அவர்களுக்கு மனோபலத்தை அளிக்கட்டும்:  PM @narendramodi”

***************



(Release ID: 1837484) Visitor Counter : 155