பிரதமர் அலுவலகம்
உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூரில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Posted On:
22 JUN 2022 9:42PM by PIB Chennai
உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் திரு மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
“உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூரில் நிகழ்ந்த விபத்து மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாநில அரசும், உள்ளாட்சி நிர்வாகமும் காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளித்து வருகின்றனர்” என்று பிரதமர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
***************
(Release ID: 1836334)
(Release ID: 1836409)
Visitor Counter : 99
Read this release in:
Bengali
,
Hindi
,
English
,
Urdu
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam