மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே சுகாதாரத் துறையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

प्रविष्टि तिथि: 08 JUN 2022 4:44PM by PIB Chennai

மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம்,  அமெரிக்காவின் சர்வதேச எய்ட்ஸ் தடுப்பூசி முன்னெடுப்பு,  இடையேயான  புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உயிர்க் கொல்லி நோய், காசநோய், கொவிட் உள்ளிட்ட நோய்களைத் தடுப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும், தேவையான புதிய உயிரி மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை கண்டறிவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா – அமெரிக்கா இடையேயான சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும், வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. 

----- 


(रिलीज़ आईडी: 1832181) आगंतुक पटल : 238
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam