பிரதமர் அலுவலகம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 05 JUN 2022 9:23PM by PIB Chennai

உத்தராகண்ட் மாநிலத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது,

“உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்து மிகவும் வேதனையளிக்கிறது. விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். விபத்து நடந்த இடத்தில் மாநில அரசின் மேற்பார்வையில் உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது”.

“உத்தராகண்டில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் ரூபாயை நிவாரணமாக அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 அளிக்கப்படும்”.

***************

(Release ID: 1831383



(Release ID: 1831461) Visitor Counter : 116