குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத்தலைவர் ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை உத்தரப்பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கிறார்

Posted On: 02 JUN 2022 6:37PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை உத்தரப்பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கிறார். ஜூன் 3-ம் தேதி அவரது சொந்த கிராமமான கான்பூர் தேஹத் மாவட்டத்தில் உள்ள பராங்க் செல்கிறார். அங்கு அவர் பொதுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடியும் கலந்து கொள்கிறார். 

ஜூன் 4-ம் தேதி கான்பூரில் உள்ள உத்திரப்பிரதேச வர்த்தக சபையின் 90-ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். அதே நாளில் கோராக்பூரில் உள்ள கீதாபிரசின்  நூற்றாண்டு விழாவிலும் பங்கேற்க உள்ளார்

ஜூன் 5-ம் தேதி மகர் செல்லும் குடியரசுத்தலைவர் சந்த் கபீர் தாசுக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர், சந்த் கபீர் அகாடமி மற்றும் ஆராய்ச்சி மையத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

ஜூன் 6-ம் தேதி உத்திரப்பிரதேச சட்டசபையில் நடைபெறும் சிறப்புக் கூட்டு கூட்டத் தொடரில் குடியரசுத்தலைவர் உரையாற்ற உள்ளார் .

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1830566

***************



(Release ID: 1830603) Visitor Counter : 147