பிரதமர் அலுவலகம்

ஜப்பான் – இந்தியா சங்கத்தினருடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 24 MAY 2022 3:08PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜப்பானின் டோக்கியோவில் 24 மே 2022 அன்று ஜப்பானின் முன்னாள் பிரதமர்கள் திரு யோஷிரோ மோரி மற்றும் திரு ஷின்ஷோ அபே ஆகியோரை சந்தித்து பேசினார். திரு யோஷிரோ மோரி, ஜப்பான் – இந்தியா  சங்கத்தின் (JIA) தற்போதைய தலைவராக உள்ள நிலையில், திரு ஷின்ஷோ அபே, இந்தப் பொறுப்பை விரைவில் ஏற்க உள்ளார். 1903ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஜப்பான் – இந்தியா சங்கம், ஜப்பானில் உள்ள மிகவும் பழமையான நட்புறவு சங்கங்களில் ஒன்றாகும்.

இந்தியா – ஜப்பான் இடையே அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் பரிமாற்றங்களை ஊக்குவிப்பதில் திரு யோஷிரோ மோரியின் தலைமையின் கீழ், ஜப்பான் – இந்தியா சங்கம் அளப்பறிய பங்காற்றியிருப்பதாக பிரதமர், பாராட்டுத் தெரிவித்துள்ளார். புதிய பொறுப்பேற்க உள்ள திரு ஷின்ஷோ அபே-வுக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர், ஜப்பான் – இந்தியா சங்கம்  தொடர்ந்து முக்கிய பங்களிப்பாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தியா – ஜப்பான் சிறப்புமிக்க நீடித்த மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக் குறித்து விரிவாக விவாதித்த தலைவர்கள், அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளமான இந்தோ - பசிபிக் குறித்த இந்தியா - ஜப்பான் தொலைநோக்கு சிந்தனைகளையும் பகிர்ந்து கொண்டனர்.  இருநாட்டு மக்களிடையேயான நேரடி தொடர்புகள் மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

 -----



(Release ID: 1828028) Visitor Counter : 143