ரெயில்வே அமைச்சகம்

ரயில் கர்மயோகி இயக்கத்தின் கீழ், 51,000-க்கும் அதிகமான முன்கள ரயில்வே பணியாளர்களுக்கு பயிற்சி

Posted On: 05 MAY 2022 3:11PM by PIB Chennai

ரயில் கர்மயோகி இயக்கத்தின் கீழ், 51,000-க்கும் அதிகமான முன்கள ரயில்வே பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பயிற்சி நிறுவனமான இந்திய ரயில்வே போக்குவரத்து மேலாண்மை நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களால்  இந்த ஊழியர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த பயிற்சி பிப்ரவரி மாதம் 28-ந் தேதி தொடங்கியது. பல்வேறு மண்டலங்களைச் சேர்ந்த ஏழு கோட்டங்களைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் இதில் பங்கேற்றனர். இதுவரை எட்டு தொகுதிகளைச் சேர்ந்த 51,000-த்திற்கும் மேற்பட்ட களப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கர்மயோகி இயக்கம் மத்திய அரசால் 2020-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதி தொடங்கப்பட்டது. உலகின் எந்தப் பகுதியிலும் திறன் கட்டமைப்பு முன்முயற்சிகளை மேற்கொள்ளும் விதமாக இது செயல்படும். ரயில்வே அமைச்சகம் பிரதமரின் அழைப்பை முதலில் ஏற்று இந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822937

***************



(Release ID: 1822949) Visitor Counter : 323