பிரதமர் அலுவலகம்

11-வது விளையாட்டு மகாகும்பமேளாவை பிரதமர் தொடங்கி வைத்தார்

Posted On: 12 MAR 2022 8:29PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி அகமதாபாத்தில் 11-வது விளையாட்டு மகாகும்பமேளாவை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத், முதலமைச்சர் திரு பூபேந்திர பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இது வெறும் விளையாட்டு மகாகும்பமேளா மட்டுமல்ல என்றும், குஜராத் இளைஞர் சக்தியின் மகாகும்பமேளா என்றும் தெரிவித்தார்.

பெருந்தொற்று காரணமாக மகாகும்பமேளா இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி விளையாட்டு வீரர்களுக்கு புதிய நம்பிக்கையையும், ஆற்றலையும் நிறைத்துள்ளது என்று கூறினார். 12 ஆண்டுகளுக்கு முன்பு தாம் விதைத்த விதை இன்று பிரம்மாண்டமான ஆலமரமாக மாறியுள்ளதாக அவர் கூறினார்.

2010 –ம் ஆண்டு அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த திரு நரேந்திர மோடி, இந்த விளையாட்டு மகாகும்பமேளாவை தொடங்கிவைத்தார். அப்போது 16 விளையாட்டுக்களில் 13 லட்சம் பேர் பங்கேற்றனர். இன்று 36 விளையாட்டுக்கள், 26 பாரா விளையாட்டுக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கலந்து கொள்ள 45 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.

இளைஞர்கள் குறுகிய வழிகளைபின்பற்றுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், நீண்டகால திட்டமிடுதல், தொடர் அர்ப்பணிப்பு ஆகியவை வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும், எந்த வெற்றியும், தோல்வியும் அத்துடன் நின்று விடுவதில்லை என்றும் கூறினார். இதுவே வெற்றிக்கான  தாரக மந்திரம் என்று அவர் தெரவித்தார்.

***************



(Release ID: 1805500) Visitor Counter : 176