நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்கு வங்கத்தில் சமூக பாதுகாப்பு சேவைகள் எளிதில் கிடைப்பதற்கு வசதியாக 125 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் ஒப்பந்தத்தில் இந்தியாவும், உலக வங்கியும் கையெழுத்திட்டுள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 10 MAR 2022 1:22PM by PIB Chennai

மேற்கு வங்கத்தில் சமூக பாதுகாப்பு சேவைகள்  எளிதில் கிடைக்கவும் ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவு மக்களுக்கு உதவி செய்யவும் 125 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசும், மேற்கு வங்க அரசும், உலக வங்கியும் கையெழுத்திட்டுள்ளன. 

இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு சார்பில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் கூடுதல் செயலாளர்  திரு ரஜத்குமார் மிஸ்ராவும், மேற்கு வங்க அரசு சார்பில்  நிதித்துறை செயலாளர் திரு சுதிப்குமார் சின்ஹாவும், உலக வங்கி சார்பில் இந்திய இயக்குநர் திரு ஜூனைத் அகமதும் கையெழுத்திட்டனர். 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804700

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1804762) வருகையாளர் எண்ணிக்கை : 327
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Telugu