குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மகர சங்கராந்தி, பொங்கல், பிகு மற்றும் இதர பண்டிகைகளையொட்டிக் குடியரசு துணைத் தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 13 JAN 2022 3:24PM by PIB Chennai

மகர சங்கராந்தி, பொங்கல், பண்டிகைகளையொட்டிக் குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது –

 “புனிதமான மகர சங்கராந்தி பொங்கல் பண்டிகையையொட்டி நமது நாட்டு மக்களுக்கு நான் இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

 சூரிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மகர சங்கராந்தி புனிதமான உத்தராயண காலத்தின் தொடக்கத்தைக் குறிப்பதாகும். இந்த விழா நாட்டின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது. தமிழ்நாட்டில் பொங்கல், அசாமில் பிகு, கேரளா மற்றும் பஞ்சாபில் விஷூ என்று கொண்டாடப்படும் இது அரியானாவில் லோஹ்ரி என்றும், பீகாரில் கிச்டி என்றும் அழைக்கப்படுகிறது. நமது நாட்டின் கலாச்சார ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் இந்த விழாக்கள் அனைத்தும் நல்ல அறுவடை, வளம், நன்றி ஆகியவற்றின் அடையாளமாக விளங்குகிறது.

 அனைவரின் வாழ்க்கையிலும் வளம், அமைதி, இணக்கத்தை மகர சங்கராந்தி கொண்டுவரட்டும்.

****



(Release ID: 1789671) Visitor Counter : 170