நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

விரைவு, திறன், அளவு, தரம் என்பவை தற்போதைய தருணத்தில் முக்கியமானவை: திரு கோயல்


பிஐஎஸ் 75-வது ஆண்டினைக் கொண்டாடுகிறது

Posted On: 07 JAN 2022 11:03AM by PIB Chennai

இந்தியத் தரநிர்ணயக் குழு (பிஐஎஸ்) அதன்  75-வது புகழ் மிக்க ஆண்டுகளை  2022 ஜனவரி 6 அன்று நிறைவு செய்துள்ளது. 1947-ல் இந்தியத் தரங்கள்  நிறுவனமாக இருந்தது, தற்போது பிஐஎஸ்-ஆக மாறியுள்ளது. தரப்படுத்துதல், சான்றளித்தல் என்பவை அதன் முக்கிய நடவடிக்கைகளாக இருந்த நிலையில், பிஐஎஸ் கடந்த 75 ஆண்டுகளாக தேசிய பொருளாதாரத்திற்குப் பங்களிப்பை  செய்திருக்கிறது.

இந்த நிறுவனத்திற்கு இதனுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுக்கும் மத்திய நுகர்வோர் நலன், உணவு, மற்றும் பொது விநியோகம், தொழில் வர்த்தகம், மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

காணொலி காட்சி மூலம் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் உரையாற்றிய அவர், “மாண்புமிகு பிரதமர், குஜராத்தின் முதலமைச்சராக வருவதற்கு முன்னதாகவே, விரைவு, திறன், அளவு, ஆகிய கோட்பாட்டைத் தந்திருந்தார். தற்போது அது விரைவு, திறன், அளவு, தரம் என மாற்றப்படுவதற்கான நேரமாகும்” என்றார்.

ஒரே நாடு, ஒரே தரம் என்பதை நோக்கி மத்திய அரசு பணியாற்றி வருவதாக அவர் கூறினார். திறமையுடன் பணியாற்றி சிறந்த இடத்தைப் பெற்றிருப்பதால், சர்வதேச அளவில் நாம் ஒருங்கிணைந்திருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார். 

ஒவ்வொரு செயல்பாடும் தரத்தைக் கோருவதால் அது  நமது மந்திரமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட திரு கோயல், பிஐஎஸ் வளர்ச்சிக்கு, தரம் என்பது அதிகம் செலவு பிடிப்பது அல்ல அது செலவைக் குறைப்பதாகும் என்பது உட்பட மேலும் ஐந்து மந்திரங்களை ஆலோசனைகளாகத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், நுகர்வோர் நலத்துறை செயலாளர் திரு ரோஹித் குமார், பிஐஎஸ் தலைமை இயக்குநர் திரு பிரமோத் குமார் திவாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788228

-----



(Release ID: 1788303) Visitor Counter : 245