சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் அண்மைச் செய்திகள்


தமிழ்நாட்டில் 121 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது

Posted On: 07 JAN 2022 9:34AM by PIB Chennai

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 149.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,71,363

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் 1.05 சதவீதமாக உள்ளது.

குணமடைந்தோர் விகிதம் தற்போது 97.57 சதவீதம்

கடந்த 24 மணி நேரத்தில் 30,836 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,43,71,845 என அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்  1,17,100 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் 7.74 சதவீதம்  ஆகும்

வாராந்திர பாதிப்பு விகிதம் 4.54 சதவீதம்  ஆகும்

இதுவரை மொத்தம் 68.68 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு, மஹாராஷ்ட்ரா, தில்லி, கேரளா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 24 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 3,007 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 1,199 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்/ அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 876 பேருக்கும், தில்லியில் 465 பேருக்கும், தொற்று ஏற்பட்டு தில்லியில் 57 பேரும், மகாராஷ்டிராவில் 381 பேரும் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 121 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 121.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788205



(Release ID: 1788225) Visitor Counter : 175