தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

டிசிஐஎல் நிறுவனம் 2020-21-ல் ரூ 17492.90 மில்லியன் தனித்த வருவாயையும் ரூ 527.70 லாபத்தையும் ஈட்டியது

Posted On: 31 DEC 2021 12:01PM by PIB Chennai

டிசிஐஎல் என அழைக்கப்படும் டெலிகம்யூனிகேஷன்ஸ் கன்சல்டண்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம்  2020-21-ம் ஆண்டில் ரூ 17492.90 மில்லியன் தனித்த வருவாயையும் ரூ 527.70 வரிக்கு பிந்தைய லாபத்தையும் ஈட்டியுள்ளது.

 

அரசின் பங்குத்தொகையான ரூ 211.10 மில்லியனுக்கான காசோலையை தொலைத்தொடர்பு துறை செயலாளரும் டிசிசி நிறுவனத் தலைவருமான திரு கே ராஜாராமனிடம் டிசிஐஎல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு சஞ்சீவ் குமார் வழங்கினார்.

 

தொடர்ந்து லாபம் ஈட்டும் நிறுவனமாக தொடக்கத்திலிருந்தே டிசிஐஎல் இருந்து வருகிறது. அரசின் பங்குத்தொகையாக ரூ 2678.60 மில்லியனை 2020-21 வரை இந்நிறுவனம் செலுத்தியுள்ளது.

 

1978 ஆகஸ்ட்டில் நிறுவப்பட்ட டிசிஐஎல் ஒரு மினி ரத்னா, வகை - I நிறுவனமாகும். தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத்  துறையின் கீழ் இது இயங்குகிறது. இது ஒரு முழுமையான இந்திய அரசு நிறுவனம் ஆகும்.

 

முதன்மை பொறியியல் மற்றும் ஆலோசனை நிறுவனமான டிசிஐஎல், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சிவில் கட்டுமானம் ஆகிய பணிகளை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மேற்கொள்கிறது. உலகம் முழுவதும் 70 நாடுகளில் தனது திட்டங்களை இந்நிறுவனம் செயல்படுத்தியுள்ளது.

 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786496

************



(Release ID: 1786575) Visitor Counter : 181