நிலக்கரி அமைச்சகம்

சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தி கணிசமாக அதிகரிப்பு

அடுத்த நிதியாண்டில் உற்பத்தி 120 மில்லியன் டன்னை தொடும்

Posted On: 04 DEC 2021 12:15PM by PIB Chennai

இந்த ஆண்டு நவம்பர் வரை சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தி ஏற்கனவே சுமார் 50 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில் (2021-22) இது 85 மெட்ரிக் டன்னை தொடும் வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு 62 மெட்ரிக் டன் என்ற உற்பத்தி சாதனையை விட இது அதிகமாகும். 


நிலக்கரி உற்பத்தியை மேலும் அதிகரிக்க, நிலக்கரி அமைச்சகத்தின் செயலர் டாக்டர் அனில் குமார் ஜெயின், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன், புதிய நிலக்கரிச் சுரங்கங்களின் வளர்ச்சியைப் பாதிக்கும் சுற்றுச்சூழல் மற்றும் வன அனுமதி தொடர்பான பிரச்சினைகள் குறித்து  ஆய்வு செய்தார். உள்நாட்டு நிலக்கரிக்கான அதிக தேவையைக் கருத்தில் கொண்டு இந்த கூட்டம் நடைபெற்றது. சுரங்கங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி அளவு  அடுத்த நிதியாண்டில் (2022-23) 120 மெட்ரிக் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதன் மூலம், உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ என்ற  கனவும் மேலும் நிறைவேறும்.



(Release ID: 1777987) Visitor Counter : 131