கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஹால்டியா துறைமுக வளாகத்தில் பல்வேறு திட்டங்களை திரு. சாந்தனு தாக்கூர் தொடங்கி வைத்தார்; இணையில்லாத வகையில் இந்திய நீர்வழிப்பாதை விரிவாகி வருகிறது என்று அவர் கூறினார்

இடுகை இடப்பட்ட நாள்: 22 NOV 2021 9:35AM by PIB Chennai

கொல்கத்தா சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தின் ஹால்டியா கப்பல்துறை வளாகத்தில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை இணை அமைச்சர் திரு. சாந்தனு தாக்கூர் பல திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். அவையாவன

  1. மேம்படுத்தப்பட்ட வெள்ள நீர் அகற்றல் & சாலைகள் அகலப்படுத்துதல்
  2. 41000 சதுர மீட்டர் சரக்கு கையாளும் பகுதியை துறைமுகத்துடன் இணைத்தல்
  3. துறைமுக விருந்தினர் மாளிகையை மேம்படுத்துதல் மற்றும் தோட்டத்தை அலங்கரித்தல்
  4. துறைமுக மருத்துவமனையில் புதிய தீவிர சிகிச்சை பிரிவு & அவசர சிகிச்சை பிரிவு.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு. தாக்கூர், இந்திய நீர்வழிப் பாதை அமைப்புகள் எந்த நாடும் ஈடு செய்ய முடியாத வேகத்தில் விரிவடைந்து வருகின்றன என்று கூறினார்.

துறைமுக தலைவர் திரு.வினித் குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

***


(Release ID: 1773854)


(வெளியீட்டு அடையாள எண்: 1773890) வருகையாளர் எண்ணிக்கை : 294
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Telugu